இங்கே..

வாசித்த புத்தகத்தைப் பற்றியும் அதன் சில வரிகளும்............

Monday, February 21, 2011

யானையின் சாவும் பூனையின் அதிர்ஷ்டமும்

சார்வாகனின் ”யானையின் சாவு” கதையைப் படித்தேன்.
முதல் முறை படித்ததுமே என் குழந்தைகளின் வளர்நிலைகளை நினைத்து நான் மிக நெருக்கமாக உணர்ந்தேன்.

மறுநாளும் படித்தேன். மறுநாளும் படித்தேன்.
பின் இன்று மகளுக்கு அதனை வாசித்தும் காட்டினேன்.

இப்படி எனக்கும் என் குழந்தைகளின் மனநிலையோடு விளையாண்டு பழக்கம் தான். அதனை அற்புதமாக ஒரு கதையாக எப்படி வடிக்கத்தோன்றியதோ அவருக்கு..

குழந்தை இல்லாத போதும்  பொம்மையானை அவரோடு விளையாடியதும் முரண்டியதும் சாத்தியமே.. கையில் வைத்திருக்கும்  கார், பையனுடைய காருடன் ரேசுக்கு போனாலோ,   பாம்பும் ஏணியுமாய் எங்கள் காய்கள் மேலேறி கீழிறங்கும்போதோ குழந்தையோடு சேர்ந்து குழந்தையாய் நானும் இருந்திருக்கிறேன் .நான் ஒரு பெரிய குழந்தையோ?

வெளியூர் போய்விட்டு வீடு வந்து,  யானை எங்கே? காணாமப்போக்கிட்டியா இல்ல காட்டுக்கு ஓடிப்போய்விட்டதா? என்று அதட்டல் அழுகையைப்போல வெளிவரும்போது, காட்டுக்கு ஓடிப்போய்விட்டதா என்ற கேள்வி குழந்தையை விட தகப்பன் அதை நிஜயானையாக கற்பனை செய்தது அழகாய் தெரிகிறது. டேய் புது விளையாட்டு ஒன்று என்று  யானையைப்பற்றீய கேள்விகளை  அலட்சியப்படுத்தும் குழந்தையின் பின் பரிதாபமாய் போகிறாரே இந்த அப்பா..
இது  உண்மை இல்லை என்று நினைப்பவர்கள் குழந்தையோடு விளையாடதவர்களாக இருக்கலாம். :)

செத்துப்போன யானையின் சடலம் ”நான் மரம் யானையில்லை” என்று  முனகிவிட்டு மறுபடியும் செத்துப்போச்சு. அவனுக்கு ஒன்னும் புரியவில்லை.
-----------------------------
கிணற்றில் விழுந்த சோகம்  - வ . ஸ்ரீனிவாசன்

இந்தக்கதையைப் படிக்கும் போதே எனக்கு நேராகவே அந்த காட்சியைக் கண்டது போல ஒரே சிரிப்பாக வந்தது. இதையும் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தோன்றியது.

இன்று இக்கதையையும் மகளுக்கு வாசித்து காண்பித்தேன். வானொலியில் கதை வாசிக்கிறவர்களின் கதையைப் போல பாவங்களோடும் நாடகத்தன்மையோடும் வாசித்தேன் . மகளும் பரிட்சைக்கு படிப்பதற்கு நடுவில் கிடைத்த இடைவேளையாக ரசித்துக்கொண்டிருந்தாள்.

பூனையை பயமுறுத்தி தள்ளிவிட்டதாகக் குற்றம் சாட்டுவதற்கு முன்பே அதற்காக பயந்து அழும் இந்திரா ,    ஒவ்வொருவரிடமும் இந்திராவை காட்டிக்கொடுக்கும் கோபுவும், இயல்பாய் முருகா முருகா ராமா ராமா வந்துடிடிம்மா பூனையம்மா என்று  இறைஞ்சும் எதிர்போர்ஷன் மாமா, ஒவ்வொருவரும்  கண் முன்னே வந்தார்கள். வந்ததும் பூனை விழுந்திருப்பது தெரிந்து காபி குடிக்க உள்ளுக்கு போய்விட்டார்களே என்று அவர் மேலும் கோவம் வந்தாலும் பின்னர் ராமா ராமா என்று இறைஞ்சிய போதும், அவர் மனைவி வெக்கப்பட்டு என்னன்னா இது என்றாலும் கூட பூனைக்காய் அவர் கவலைப்பட்டும் .. கடைசியில்  பூனையை எடுத்துக்கொடுத்த பையனை ஸ்வாமிநாதனாட்டம் வந்து எடுத்துக்கொடுத்தாயே என்ற அன்புடன் நெட்டிமுறிக்கும்போது
 நல்ல மனுசந்தான்யா இவரு ..இவரப்போய் ..என்றும் நினைச்சிக்கிட்டேன்.

ராகவன் கிணற்றில் விழுந்த பூனைக்கும் தன் வேலை தேடும் நிலைக்குமாய் கடைசியில் எதோ ஒரு ஒற்றுமையாக நினைச்சுக்கிறான். தங்கை வருத்தப்படாமலிருக்க பூனையைக் காப்பத்த போராடினது அருமைதான் ஆனா அவன் நிலை கிணற்றில் விழுந்த பூனையைப்போல அவனுக்கு தோன்றி இருக்கும்போல..ம்.

நல்ல பையன் அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சிடனுமே முருகான்னு எனக்கு  கதை முடியும் போது தோணிடுச்சு.. இந்நேரம் கிடைச்சிருக்குமில்ல கதை வெளிவந்து பலகாலமாகிடுச்சே..:)

-------------------------
இவ்விரண்டு கதைகளும் இருப்பது ..
புத்தகம் : இந்த நூற்றாண்டு சிறுகதைகள் வால்யூம் 3
கலைஞன் பதிப்பகம்

Sunday, February 13, 2011

கடல்புரத்துத் தோணி

கடல்புரத்துத் தோணி - டேவிட் சித்தையா மொழிபெயர்த்த சிறுகதை தொகுப்பிலிருந்து சில கதைகள்.

  கடல்புரத்துத் தோணி -எஸ்.கே. பொற்றேகாட்
தோணி ஓட்டும் மம்முவின் அலீயாவின் மீதான காதலும் சென்றடையமுடியாத அக்காதலுக்காய் அவன் தோணியோடு பேரலைக்கு தன்னை ஒப்புக்கொடுத்ததுமான ஒரு காதல்கதை.


 அந்த த் தோணியும் அவனை அடையாளம் கண்டுகொண்ட மாதிரி அலைகளில் அசைந்தாடுகிறது. கொஞ்சிக் குழைந்து மெல்ல நகர்ந்து அவன் காலடி அருகில் வந்து சேருகிறது அதற்கு உயிரில்லை என்று யார் சொல்வார்கள்?

‘எதற்காக அந்த ப் பூமரம்
இனமும் பூக்கவில்லை?
எப்பொழுது அந்த ப் பூமரம்
மலர, நான் தேன் குடிப்பேன்?”
ஒரு பேரலைப் பேயைப்போல வாய் பிளந்து அவனைத் தனக்குள் அடக்கிக்கொண்டது.
------------------------

மலையாளம் - மழைக்கும் மரணத்தின் நிறம்தான் - பி.சோமன்.
“முடியாது .இவனுக்கு இன்னோரு சென்மம் வேண்டாம். பெரிய வீட்டு அம்பட்டனாக இனியும் அவமானப்படமுடியாது.”
சிதையிலிருந்து எழுதவர்உ முயன்ற பெரிய வீட்டுக்காரனை அய்யாக்குட்டி பலவந்தமாகத் தீக்குழிக்குள் பிடித்துத் தள்ளினா. அவன் திமிறிக்கொண்டு வெளியே வந்துவிடாமல் இருப்பதற்காக அய்யாக்குட்டி விறகுக்கொள்ளிகள் மேலேயே விழுந்து கிடந்தான்.”

மராட்டி --வித்தியாசமனவள் அல்ல - ஊர்மிளா ஹரிசந்திர பவார்

அந்த தாயிகளே போல நானும் பொண்ணு தான் . தாயிதான். விதவைங்கரதாலே நான் மட்டும் வித்தியாசமானவ இல்ல.எனக்கும் அம்மாவாகனும் பிள்ளை பெறனும் பால்குடுக்கனும்ன்னு ஆசை இருக்கு.”
(தெலுங்கு ) பொம்மை மனிதர்கள் - காசிபட்லா வேணுகோபால்


நான் நம்பிய, ஊகித்த எல்லாமே உதிர்ந்து போயின. எந்த முடிவுமற்ற ஒரு கதையே மிஞ்சியது. கடிதங்களைப் பார்ப்பதற்கு முன்பு ஒரு முரளி மட்டுமே இருந்தான். ஆனால் இப்பொழுதோ? சேன்னக்கேசவுலு, சீனிவாசலு, சாயம்மா, ஐநூற்று அறுபது ரூபாய்கள். அவன் புகைபடம் இவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து என்னை வேட்டையாடி.... பொம்மை மனிதர்களின் பொய்த்தோற்றங்களைக் காட்டிக்கொண்டே இருக்கின்றன.
காவேரி - காசிபட்லா வேணுகோபால்

பிரளயமே புரண்டு வந்தாலும் , சரி நான் என்ன செய்தாலும் ,அவற்றைதான் ஆனந்தமாக அங்கீகரிக்க வேண்டுமென்ற அவளுடைய பிடிவாதத்தை என்னால் தாங்கமுடியவில்லை.
ஏன் இப்படி கொஞ்சம் கூட பொறுப்பில்லாம நடந்து என்னை கஷ்டப்பட்டுத்தறே இவ்வளவு பொறுப்பு இல்லாம வாழ்ரத விட சே..
புரிந்துவிட்டது. நான் என்ன செய்தாலும் ஆனந்தமாக ஏற்கிற காவேரி. என் அலட்சியத்தை தாங்கமுடியாமல்..
என் கொலைக்கு சாட்சிகள் இல்லை!


(இந்தி)வீடு - ஸ்ரீகாந்த் வர்மா..
கண்ணிழந்த பிச்சைக்காரனும் மனைவியும்..

Friday, February 11, 2011

வாழ்க்கையே நாடகம்

http://www.moderntamilworld.com/illakiyam/story_ramakrishnan.asp

 கதை ’கடவுளின்  குரலில் பேசி ‘ - எஸ்.ராமகிருஷ்ணன் ..
இதை வாசித்த வாரத்தில் தான் எகிப்திய புரட்சி சதுக்கம் முழுதும் மக்களின் எழுச்சிக்குரல் .. அதனாலோ என்னவோ ரொம்பவும்  பிடித்திருக்கிறது.

 முதல் நாள் அன்று ஜான் ஒருவன் மட்டும் அந்த சதுக்கத்தில் சிறு மேஜையைப் போட்டு, ஏராளமான காகிதங்களை வைத்து எழுதிக்கொண்டிருந்தான். பொது இடத்தில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தான். பொது இடத்தில் உட்கார்ந்து எழுதும் அவனை மக்கள் வேடிக்கை பார்த்துப் போனார்கள். கேட்கும் சிலா�டம் இது தனிநபர் நடிக்கும் நாடகம் என்றான். நாடகத்தின் ஒரே பாத்திரம் ஜான். நாடக ஆசி��யன் பலகாலமாக முயன்று நாடகம் எழுதமுடியாமல் தோற்றுக்கொண்டிருக்கிறான். நாடகம் எழுதுவதற்கான காகிதங்கள் குரோட்டோவெஸ்கி நாடக அரங்கு பற்றிய புத்தகம், வில்ஸ் பாக்கெட், மை பேனாக்கள், சிவப்புநிற சிகரெட் லைட்டர், அவன் லைட்டரை கொளுத்துவதும் சிகரெட்டை எடுக்க முனைவதும், பின் விட்டுவிடுவதும் கண்டு மாபெரும் அபத்த நாடகம் என மக்கள் சிரித்தார்கள். ஜான் நாடகம் எழுத பேப்பர்களை வேகமாக எடுப்பான். மக்கள் கூட்டம் சிரிக்கும். பின் அவன் நாடகப் பாத்திரங்கள் பெயரை வரிசையாக எழுதுவான். அவற்றை வாய்விட்டுப் படிப்பான். இப்படியாக தனி ஆளாக நடந்த ஜானின் நாடகத்தின் இரண்டாம் பாத்திரம் இரண்டாம் நாள் கிடைத்தது. இரண்டாவது பாத்திரமாக ஒருவன் மாலைப்பேப்பரை வாங்கிக் கொண்டு வந்து ஜானுக்குப் பக்கமாக உட்கார்ந்து தினமும் படித்தான். சுவாரஸ்யமான அரசியல் தலைப்புச் செய்திகள். நடிகைகளின் ரகசிய உறவுகள், குரங்குகுசலா, சிந்துபாத்தின் கன்னித் தீவு இப்படி. ஜான் நாடகம் எழுதுவதை நிறுத்தி விட்டுப் பேப்பர் படிப்பவனோடு சிறிது நேரம் சேர்ந்து படிப்பான். அவர்கள் அரசியல் சர்ச்சை செய்து கொள்வார்கள். இப்படியாக ஜானின் நாடகத்தில் இப்போது நாற்பது பாத்திரங்கள் சேர்ந்துவிட்டன. அவர்கள் வருவார்கள். பேசிக்கொள்வார்கள். ஜான் சொல்வது போலக் கேட்பார்கள், அல்லது தங்கள் வேலைகளைச் செய்வார்கள். ஜான் பாத்திரங்களை ஒழுங்குபடுத்துவதில்லை. பாத்திரங்கள் தங்கள் வசனங்களைத் தாங்களே பேசினார்கள். ஒருவர் கணக்கிட்ட படியிருந்தார். இன்னும் சிலர் பாடம் நடத்தினார்கள். தினமும் புதுப் புதுப் பாத்திரங்கள் வந்து சேர்ந்து கொண்டிருந்தன. பாத்திரங்கள் அதிகமான ஒரு நாளில் இரண்டு காவலர்கள் வந்த ஜானிடம் விசாரித்தார்கள்.

என் அன்பான சாரதி


கடல்புரத்துத் தோணி என்கிற மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பு.
டேவிட் சித்தையா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட  கதைகள்.

கன்னட மூலம் சசி தேஷ்பாண்டே..
’என் அன்பான சாரதி’ இந்தக் கதை படித்ததும் அப்படி ஒரு உணர்வலைகள். விதவையாகிவிட்ட மகளின் வேதனையை வெறுப்பை மாற்ற முயன்று தோற்ற விதவைத்தாய், அப்பாவின் குறைகளைக் கூறி மகளிடம் பேசுகிறாள்.மகள் கணவனுடன் இருந்த மகிழ்வைக்கண்டு தான் பொறாமைகொண்டதாகவும் கூறுகிறாள். தன் கணவனைப்பற்றிய குறைகள பகிர்கிறாள். அமைதியான ஆனால் ஒரு விதமான குருஷேத்திரக்களம் போன்ற குமுறலான உறவுகளுக்குள் சமநிலைகொண்டுவர அன்பான சாரதியாக தன் பேத்தியின் அன்பை நினைத்துக்கொண்டு செய்கிற யுத்தம் என்றே நினைக்கிறாள்.

”இவளை, என் மகள் ஆர்த்தியை ஒன்பது மாதங்கள் என் உடலில் வளர்த்தேன். அவளுடைய ஒவ்வொரு இதயத்துடிப்பையும் உணர்ந்தேன் . ஒவ்வொரு சலனத்தையும் கூட. என் வலிகளும் அதிர்வுகளும் அவளை பாதிக்காது. அவ்வளவு பாதுகாப்பாக வயிற்றுக்குள் வைத்திருந்தேன். அதே மாதிரி இப்பொழுதும் என் மனவலிகளால் அடிகளாலும் தாக்கப்படாமல் பாதுகாப்பாகவே இருக்கிறாள். ஆனால் அவளுடைய மனவலிகளும் அடிகளும் என்னைத்தான் தாக்குகின்றன அவளோடு சேர்ந்து நானும் வேதனைப்படுகிறேன். என்னுடைய மற்றைய உணர்ச்சிகளைப்போல அவைகளும் வீணான , பயனற்ற வலிகளும் அடிகளும் தான். அதிலிருந்து என்னாலும் தப்ப முடியவில்லை.அவளையும் தப்பிவிக்கமுடியவில்லை. ”

அமரிக்காவில் பத்து பன்னிரெண்டு வயது பையன்கள் கூட பெண்களை கற்பழிக்கிறார்களாம். .............
.................. அம்மாதிரியான அரக்கர்களைப் பெற்றவர்கள் எப்படி அன்பான பெற்றோர்களாக இருக்கமுடியுமென்று நினைத்ததுண்டு. இப்போழுது தெரிகிறது எனக்கு. பிறப்பே ஒரு விபத்துதான்.
கொடுமையான விபத்து. நம் குழந்தைகள் நம்மவர்கள் என்று நம்பி நாம் தான் ஏமாந்து போகிறோம். நம்பிள்ளைகளைப்பற்றி நமக்கு எல்லாம் தெரியும் என்றும் . ஆனால் காக்கைக்கூட்டில் வளர்ந்த குயிலின் குஞ்சு மாதிரி அவர்கள் எபொழுதும் அந்நியர்களே. ஆனாலும் பொறுப்பிலிருந்து நம்மால் தப்ப முடியாததுதான் அவலம். இன்றைக்கு என் மகள் மகிழ்ச்சியாக இருக்கிற மற்றவர்களை வெறுக்கிறாள் என்றால் தவறு என்னுடையது தான்.”
‘ஆமா உன் அப்பாதான் ஆனா எனக்கு என்னவாக இருந்தார் அவர் இறந்தப்பவே தொலையட்டுமுன்னு விட்டுட்டேன். அதுக்கப்பறம் ஒண்ணுமே இல்லை மிச்சமா , ஒண்ணும்..”

(ஆனா நான் என்று கேட்கும் மகளுக்கு..)

நீயா ? வெறும் புகையும் சிறு சாம்பலுந்தான் நீ. புகைக்கிற சிகரெட் மாதிரி . என் திருமண வாழ்க்கை மாதிரி எரிஞ்சு போனதுக எல்லாம் முடிஞ்சு போனதுக>




வேண்டாம் எனக்கு சொல்லாதே வேண்டாம்

ஒவ்வொரு வேண்டாமோடும் கையிலிருக்கும் படத்தை அடிக்கிறாள், கண்ணாடித்துண்டுகள் சிதறுகின்றன. இப்பொழுது அவர் நிர்வாணமாகிவிட்டார், அவலட்சணமாகவும். அப்பிடியும் எனக்கு இரக்கம் பிறக்கவில்லை. இறந்தவர்களுக்கு அல்ல, வாழ்கிறவர்களுக்குத்தான் அன்பும் அரவணைப்பும் தேவை. இறந்தவர்களுக்கு எதற்கு ? அவர்களிடம் விசுவாசமாகவும் இருக்கத்தேவையில்லை.

நீயும் மாதவும் அறைக்குள்ளாற இருந்து பேசி சிரிச்சப்ப ................
உம்மேல பொறாமைப்பட்டேன் .அவர் இறந்தப்ப மணி அடிச்சி பள்ளிக்கூடம் விட்டதும் ப்ரீதி எப்படி உணருவாளோ அப்படித்தான் நானும் உணர்ந்தேன். “



The story “My Beloved Charioteer” describes the emotional rupture of a widow mother from her widow daughter, Arti, which exists for inscrutable reasons. Here the mother constantly remains on qui vive for an opportunity to please her cross-grained daughter whose sense of dissatisfaction with and resultant aversion to life is canalized towards her docile mother in the form of fury ad anger. The protagonist epitomizes all the attributes of mother ranging from her unremitting anxiety for her child’s well being to self-assumed guilt consciousness at her misery. “If my daughter is so empty that she can hate people who are happy, the fault is, to some extent, mine.” (TIAOS p.56) the dead weight of the mortified love and rebuffed affection keep on assuming ingravescent proportions until one day when the protagonist peeved by the fact that Arti still derives strength for living from her selfish father, she indulges in paroxysms of anger, divulging his crudity and callousness as a husband and thus impels her daughter to ‘see’ her parents as people.